நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் வேலை காலி! அதிர்ச்சி அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்றைய பேச்சுவார்த்தைக்கு பின் பெரும்பாலான மருத்துவர்கள் வேலைக்கு திரும்பிவிட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பயிற்சிக்கு திரும்பத் தவறினால் நன்னடத்தை சான்று கிடையாது என்றும், அதேபோல் நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் போராடும் பேராசியர்களின் பணியிடம் காலியானதாக அறிவிக்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

Leave a Reply