நாம் முதலில் இந்து. அதற்கு அப்புறம்தான் மற்றது: ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமார்

விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்துகொண்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆவேசமாக பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் ஈடுபட்டுவருகிறார் என்றும், நாம் அனைவரும் இணைந்து, வலிமையான புதிய பாரதத்தை உருவாக்க ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும் என்றும், நாம் முதலில் இந்து. அதற்கு அப்புறம்தான் மற்றது…” என்றும் ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமார் பேசியதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர்.

மேலும் மோடியே அடுத்த பிரதமராக வருவார் எனக் கூறினேன். அதேபோல அவரே பிரதமராக வந்துவிட்டார் என்றும், கடந்த ஆண்டு, இதே சின்னமனூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நான்தான் தொடங்கிவைத்தேன் என்றும், தற்போது, நாடாளுமன்ற உறுப்பினராக இந்த ஊர்வலத்தைத் தொடங்கிவைத்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply