shadow

நான் முட்டாள் இல்லை: 7 பேர் விவகாரம் குறித்து ரஜினிகாந்த் ஆவேசம்

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான கேள்வி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆபத்தான கட்சியா என்று கேட்டதற்கு எந்த 7 பேர், எனக்கு தெரியாது, பாஜக ஆபத்தான கட்சியாக பார்த்தால் அப்படித் தான் என்று கூறினார்.

எந்த 7 பேர் என்று ரஜினி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்க போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விவகாரம் குறித்து ரஜினிக்கு ஒன்றுமே தெரியாது என்ற மாய தோற்றத்தை சிலர் ஏற்படுத்துகின்றனர். 7 பேர் விவகாரம் குறித்து ஒன்றுமே தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை.

பேரறிவாளன் பரோலில் வெளிவந்த போது அவரிடம் தொலைபேசியில் பேசினேன். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து.

பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால், அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே. ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது, அதை மக்கள் முடிவு செய்யட்டும்.

Leave a Reply