shadow

நான் அரசியல் பேசாவிட்டால் பலருக்கும் தூக்கம் வராது: மு.க.ஸ்டாலின்

நான் அரசியல் பேசாவிட்டால் பலருக்கும் தூக்கம் வராது என திருச்சி கிறிஸ்துமஸ் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழகத்தில் பாஜகவை தலைதூக்கவிடாமல் செய்ததைப் போல, இந்தியாவிலும் தலைதூக்க விடமாட்டோம் என சூளுரைத்த மு.க. ஸ்டாலின், ‘நான் தனிப்பட்ட முறையில் மோடியை விமர்சிக்கவில்லை என்றும், பிரதமர் மோடியை தான் விமர்சித்ததாகவும் கூறினார்.

மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க பிரதமர் மோடி வரவில்லை, இரங்கல் தெரிவிக்க கூட அவருக்கு நேரமில்லை என்றும், ஆனால் அடிக்கடி குஜராத்துக்கு மட்டும் சென்று வந்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

 

Leave a Reply