shadow

நான் அடிக்கடி மாமியார் வீட்டுக்கு சென்று வந்தவன். டிடிவி தினகரன் பதிலடி

நேற்று காலை தினகரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘இன்னும் ஒரு வாரத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் வீட்டுக்கு அனுப்புவேன்’ என்று கூறினார். இதற்கு நேற்று இரவு நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘நான் வீட்டுக்கு மட்டும் தான் போவேன் ஆனால் தினகரன் மாமியார் வீட்டுக்கு போவார்’ என்று பதிலடி கொடுத்தார்

இந்த நிலையில் இதுகுறித்து டிடிவி தினகரன் இன்று கூறியதாவது:-

நான் பலமுறை மாமியார் வீட்டுக்கு சென்று வந்தவன். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உறவினர் முறை வருபவர்களும் சிறைக்கு சென்றவர்கள். என் மீது சுமத்தப்பட்டுள்ள அன்னியசெலாவணி வழக்கு ஊழல் வழக்கு அல்ல.

முதலமைச்சர் தரப்பினர் ஊழல் செய்துவிட்டு அச்சத்துடன் இருக்கிறார்கள். சசிகலாவிற்கு துரோகம் செய்தவர் முதலமைச்சர் பழனிசாமி. முதலமைச்சர் பழனிசாமி தரப்பினர் அனைவரும் விட்டுக்கு செல்வது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply