நான்கு கால்கள், மூன்று கைகளுடன் பிறந்த வினோத குழந்தை!

இந்தியாவில் 24 வயது பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்ததில் அவற்றில் ஒரு குழந்தைக்கு நான்கு கால்கள், மற்றும் மூன்று கைகள் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இன்னொரு குழந்தை நார்மலாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது

அந்த பெண் கர்ப்பம் அடைந்ததில் இருந்து மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவில்லை என்றால் அதனால் இதுகுறித்து முன்கூட்டியே அவருக்கு தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது

இருப்பினும் இரண்டு கால்கள், மற்றும் ஒரு கை ஆகியவற்றை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்

அந்த பெண்ணுக்கு கருவில் மூன்று குழந்தைகள் உருவாகியிருக்கலாம் என்றும் ஆரம்பகாலத்தில் சரியான சிகிச்சை முறை இல்லாததால் இவ்வாறு ஆகியிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் மேலும் தெரிவித்தனர். 

இந்த அதிசய குழந்தையை பார்வையிட அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் குவிந்து வருவதால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply