நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து, ரயில், விமான நிலையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

தமிழகம் கடந்த சில ஆண்டுகளாகவே போலியோ இல்லாத மாநிலமாக இருந்து வரும் நிலையில் இந்த நிலை தொடர்ந்து நீடிக்க, ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply