shadow

நாடாளுமன்ற கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 13 வரை இந்த கூட்டத்தொடர் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது

ஆனால் பெகாஸ் மற்றும் விவசாய போராட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்

பல நாட்கள் நாடாளுமன்றம் சந்தித்து எந்தவித அலுவல் பணிகளும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆகஸ்ட் 13 வரை நடத்த திட்டமிட்டிருந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை இன்றுடன் நிறுத்திக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
இதுகுறித்த அறிவிப்பு இன்னும் சில மணிநேரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது