நாங்க கடனை தள்ளுபடி செய்றோம், நீங்க தம்பிதுரையை தள்ளுபடி செய்யுங்க: ஜோதிமணி

“நாங்கள் விவசாயக் கடனையும், கல்விக் கடனையும் தள்ளுபடி செய்வதாக கூறுகிறோம். அதேபோல, நீங்களும் இந்தத் தேர்தலில் தம்பிதுரையை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பேசியது பலரை கவர்ந்தது

தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் ஜோதிமணி மேலும் பேசியதாவது: தற்போது பிரசாரத்துக்கு செல்லுமிடத்தில், பெண்கள் வழிமறித்து கேள்வி கேட்கும்போது, தம்பிதுரை கோபமடைந்து, ‘ஓட்டு போட்டா போடுங்க. இல்லாவிட்டால் போங்க’ எனப் பேசுகிறார். ஓட்டுபோட்ட மக்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். மக்களுக்கு ஏதேனும் செய்திருந்தால், `இதைச் செய்திருக்கிறேன், அதைச் செய்திருக்கிறேன்’ என்று விளக்க வேண்டும். இல்லாவிட்டால், குறைந்தபட்சம் மக்களிடம், ‘மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்றாவது தம்பிதுரை கூற வேண்டும்.

ஆனால், அவர் வாக்காளர்களை கண்டபடி பேசுகிறார். அதனால், விவசாயக் கடனையும், கல்விக் கடனையும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தள்ளுபடி செய்கிறோம் என்று சொல்கிறோம். அதேபோல், வாக்காளராகிய நீங்களும் இந்தத் தேர்தலில் தம்பிதுரையை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என வித்தியாசமான வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply