நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக, புதுவையில் காங். முன்னிலை

தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன

பொதுவாக தபால் வாக்குகள் திமுகவுக்கு ஆதரவாகவே கிடைக்கும். ஆனால் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் தபால் வாக்குகளே அதிமுகவுக்கு ஆதரவாக கிடைத்துள்ளது. சற்றுமுன் வெளியான தகவலின்படி விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் முன்னிலையில் உள்ளார். அதேபோல் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னணியில் உள்ளார். மேலும் புதுவை காமராஜ் நகர் ஆகிய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னணியில் உள்ளார்.

அதேபோல் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply