நேற்று ரஜினி தனது டுவிட்டரில் தனது பெயரில் வெளியான போலியான அறிக்கை பொய் என்றும் ஆனால் அதில் உள்ள தகவல்கள் உண்மை என்றும் தெரிவித்து ஒரு குழப்பமான தகவலை தெரிவித்து இருந்தார்
இதனால் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று ஒரு தரப்பினரும் இல்லை அவர் வருவார் என்று இன்னொரு தரப்பினர் கூறிவருகின்றனர்
இந்த நிலையில் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது டுவிட்டரில் நவம்பர் 24 குருப்பெயர்ச்சிக்குப் பின் ரஜினியிடம் இருந்து நல்ல செய்தி வரும் என்று கூறியுள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நவம்பர் 24 குருப்பெயச்சிக்குப்பின் ரஜினி மக்கள் மன்றமும் மாற்றம் எதிபார்ப்பவர்களுக்கும் மிக சந்தோஷப்படுத்தும் அறிக்கை நிச்சயம் வெளிவரும். ஜோசியமோ எதிர்பார்ப்போ நல்லதே நடக்கும். 25 ஆண்டுகள் காத்திருப்பவர் ஏமாறமாட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.