நள்ளிரவில் சாமி சிலைகள் உடைப்பு: ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு

ஈரோடு மாவட்டம் சிவகிரி என்ற பகுதியில் சாமி சிலைகளை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் உடைத்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஈரோடு மாவட்டத்தில் தொப்பபாளையம் என்ற பகுதியில் சாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளை பொதுமக்கள் வழிபட்டு வரும் நிலையில் நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர்
உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதனையடுத்து அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply