shadow

நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது: தமிழக அரசு மனு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 25ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை வகித்து வரும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு இன்று பதில் மனு அளித்துள்ளது.

இந்த மனுவில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதில் மனுவை தமிழக அரசின் சார்பில் உள்துறை துணை செயலாளர் தேவாசீர்வாதம் சென்னை ஐகோர்ட்டில் சற்றுமுன்னர் தாக்கல் செய்தார்.

Leave a Reply