‘நரகாசுரன்’ படத்தில் இருந்து கவுதம் மேனன் நீக்கமா?
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நரகாசூரன்’ படத்தில் இருந்து பிரபல இயக்குனர் கவுதம்மேனன் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
நரகாசுரன் படத்தை கவுதம்மேனன் தயாரிப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேனுக்கும் கவுதம்மேனனுக்கும் சில மாதங்களுக்கு முன் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து கவுதம்மேனன் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பின்னணி வேலைகள் முடிந்து தணிக்கை குழுவிற்கு படம் சென்றுள்ளது. இந்த படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகும் என்றும் இந்த படத்தின் டிரைலர் இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என்றும் கார்த்திக் நரேன் தனது டுவிடட்ரில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.