shadow

நயன்தாரா , சக்தி வாய்ந்த பாதைக்கு மாறியுள்ளார்: விக்னேஷ்சிவன்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘அறம்’ திரைப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருவதால் நயன்தாரா, இயக்குனர் கோபிநயினார் உள்பட படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படம் நிச்சயம் பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு இணையாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஒரு விமர்சகர் 5க்கு 5 ஸ்டார் கொடுத்துள்ளார். அதாவது 100க்கு 100 மார்க் கிடைத்துள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறிய நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், ‘நான் இதுவரை 5க்கு 5 எந்த படமும் பெற்று பார்த்ததே இல்லை’ என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

‘அறம்’ படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்று கூறிய விக்னேஷ் சிவன், ‘இந்த படத்தை பார்க்கும்போது ஒருவித மயக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. நயன்தாரா வழக்கமான பாதையில் இருந்து வெளியேறி, சக்தி வாய்ந்த பாதைக்கு மாறியுள்ளார். தைரியமான முயற்சி. மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை நயன்தாராவின் எண்ட்ரிக்கு பின்னர் வேகம் பிடித்து கடைசி வரை விறுவிறுப்புடன் செல்கிறது. ஒவ்வொரு ஷாட்டிலும் நம் டென்ஷன் அதிகரிக்கும் வகையில் உள்ளது. மேலும் ஜிப்ரானின் இசை, கோபியின் அர்ப்பணிப்புக்கு பாராட்டுக்கள்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply