நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி சஸ்பெண்ட்!

நடிகை நயன் தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவி சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ராதாரவி கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக திமுகவில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்’ என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

நடிகர் ராதாரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனர் விக்னேஷ் சிவன், திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply