நயன்தாராவை அவமதிப்பவர்கள் அவமான சின்னங்கள்: குஷ்பு

நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு திரையுலகினர் குறிப்பாக நடிகைகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை குஷ்புவும் தனது பங்கிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் ராதாரவிக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

தங்கள் அகம்பாவத்தை ஊக்கப்படுத்திக்கொள்ள ஆண்கள் எளிதில் கையாளும் வழி, ஒரு பெண்ணை இழிவுபடுத்துவது அல்லது அவளது குணத்தைக் கொச்சைப்படுத்துவது. ஒரு பெண் எப்படி வாழ்கிறாள், என்ன செய்கிறாள் என்பதைப் பற்றியெல்லாம் யாரும் பேசக்கூடாது. நயன் அகத்திலும் புறத்திலும் அழகானவர். அவரை அவமானப்படுத்துபவரும், அதைக் கைதட்டி ரசித்தவர்களும் திரைத்துறைக்கே அவமானச் சின்னங்கள்.

Leave a Reply