நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி: கோவா முதல்வர் நிம்மதி

கோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக முதல்வர் பிரமோத் சவாந்த் வெற்றி பெற்றுள்ளதால் முதல்வரும் அவரது அமைச்சரவை சகாக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

தற்போது 36 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டப்பேரவையில் பாஜக அரசுக்கு 20 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் பதிவானது. இதனால் கோவாவின் புதிய முதலமைச்சரான பிரமோத் சவாந்த் அரசு தப்பியது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை முதலமைச்சர் பிரமோத் சாவந்த் வெற்றி பெற்றுள்ளதால் ஆட்சி அமைக்கும் கனவில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

Leave a Reply