நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகன் குறித்த திடுக்கிடும் தகவல்

திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கொள்ளை விவகாரத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட முருகன் கர்நாடக மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டான்.

இந்நிலையில் முருகனை காவலில் எடுத்து விசாரித்து வரும் தமிழக போலீசார், விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர்

லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளை மட்டுமின்றி ஏற்கனவே முருகன் பல கொலைகளில் சம்பந்தபட்டு இருப்பதாகவும், முருகன் கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பு சுமார் 100 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது

மேலும் கொள்ளையடித்த பணத்தில் பிரபல மற்றும் துணை நடிகைகளுடன் உல்லாசமாக முருகன் இருந்தது, திரைப்படம் எடுக்க என பணத்தை தண்ணீராக செலவு செய்ததும் தெரிய வந்துள்ளது

இந்த விவகாரத்தில் இன்னும் ஆழமாக விசாரித்தால் முருகன் எந்தெந்த நடிகையுடன் உல்லாசமாக இருந்தார் என்பது உள்பட பல விஷயங்கள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply