நடிகர் விக்ரம் ரசிகர் மன்ற வழக்கு: 7 பேருக்கு ஆயுள்தண்டனை
நாமக்கல் அருகே நடிகர் விக்ரமுக்கு ரசிகர் மன்றம் அமைப்பது தொடர்பாக நடந்த தகராறில் தேசிய கபடி வீரர் மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாமக்கல் பகுதியை சேர்ந்த கபடி வீரரான மணிகண்டன் நடிகர் விக்ரமின் தீவிர ரசிகராகவும் இருந்து வந்தார். தூசூரில் விக்ரம் ரசிகர் மன்றத்தை தொடங்கிய அவர் கிளை தலைவராகவும் இருந்து வந்தார். இங்கு ரசிகர் மன்றம் தொடங்குவது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமசந்திரன் என்பவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு வு தூசூர் மாரியம்மன் கோவில் அருகே மணிகண்டன் தனது நண்பர்கள் அஜித்குமார், பழனிச்சாமி ஆகியோருடன் பேசிக் கொண்டு இருந்தபோது அங்கு ராமச்சந்திரன் அவரது தம்பிகள் ரகுமான், ரவிச்சந்திரன் , மற்றும் நண்பர்கள் சிலர் வந்து ம்ணிகண்டனை சரமாரியாக தாக்கினர். இதில் மணிகண்டன், அவரது நண்பர்கள் அஜித்குமார், பழனிச்சாமி ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வழக்கு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.