நடிகர் சசிகுமார் திடீர் சஸ்பெண்ட்: திரையுலகில் பரபரப்பு

பிரபல நடிகரும், இயக்குனருமான சசிகுமார் தனது அடுத்த படத்தில் சஸ்பெண்ட் ஆன போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் நேமிசந்த் ஜெபக் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் சசிகுமார் நடிக்கவுள்ளார் இந்த படத்தில் சசிகுமார், சஸ்பெண்ட் ஆன போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் ஜிஎன் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் நாயகியாக மானசா நடித்துள்ளார் என்றும், ஆனாலும் அவர் சசிகுமாருக்கு ஜோடி இல்லை என்றும் தெரிவித்த இயக்குனர் ஜிஎன் கிருஷ்ணகுமார் இந்த படத்தில் குருசோமசுந்தரம் முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து கிராமத்து கதையில் நடித்து கொண்டிருக்கும் சசிகுமாருக்கு இந்த கேரக்டர் நிச்சயம் புதுமையானதாக இருக்கும் என்றும் இந்த படத்தின் ஒன்லைன் கதையை கேட்டவுடன் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் ஜிஎன் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply