நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் யாருக்கு லாபம்? அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்கு பின் பல நடிகர்கள் அரசியலுக்கு முதல்வர் கனவுடன் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் அதிமுகவுக்கு லாபம்தான் என்றும், எத்தனை நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் அதிமுக என்ற இயக்கத்தில் ஒரு செங்கலைக்கூட அசைக்க முடியாது என்றும், அமைச்சர் ஓ.எஸ் மணியன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இரண்டு பெரிய தலைவர்களின் மரணத்திற்கு பின்னர் ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை என்பதால் தமிழகத்தில் யாருக்கு செல்வாக்கு இருக்கின்றது என்பதை கணிக்க முடியவில்லை. ஒரு தேர்தல் வந்தால்தான் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம் என்பதை புரிந்து கொள்ள முடியும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.