நக்கீரன் கோபால் மீது சட்டப்பிரிவு 124 -ன் கீழ் வழக்குப் பதிவு
சென்னை விமான நிலையத்தில் இன்று கைது செய்யபட்ட நக்கீரன் கோபால் மீது சட்டப்பிரிவு 124 -ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் பிரிவு என்பது குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் பணியை செய்ய விடாமல் உள்நோக்குடன் செயல்படுதல் என்னும் பிரிவை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நக்கீரன் கோபால் கைது உள்நோக்கமானது என்று, நிர்மலாதேவி வழக்கை மூன்றே பேர்களூடன் முடிக்க காவல்துறை முயல்வதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.