shadow

நக்கீரன் கோபாலை சந்திக்கின்றார் மு.க.ஸ்டாலின்

கவர்னர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று காலை கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால், சற்றுமுன்னர் திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார்.

நக்கீரன் கோபாலுக்கு மருத்துவ பரிசோதனை நடக்கும் திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்திருப்பதாகவும், அவருடன் துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நக்கீரன் கோபால் கைது மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பதும் கவர்னரை கையில் வைத்து கொண்டு ஒரு எமர்ஜென்ஸி அரசை நடத்தி வருவதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply