தோழியுடன் ஓடிப்போன டிக்டாக் வினிதா என்ன ஆனார்? திடுக்கிடும் தகவல்
காரைக்குடியை சேர்ந்த நர்ஸ் வினிதா என்பவர் கணவர் ஆரோக்கிய லியாவை விட்டுவிட்டு டிக்டாக் தோழி அபி என்பவருடன் 25 சவரன் நகையுடன் தலைமறைவானதாக அவரது தாயாரும் கணவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் திடீர் திருப்பமாக நேற்று காவல்நிலையத்தில் வினிதா ஆஜராகி விளக்கம் அளித்தார்.
தான் எங்கும் யாருடனும் ஓடிப்போகவில்லை என்றும், தனது தோழி அபி பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய கணவரும் தாயாரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் காவல் நிலைய அதிகாரிகளிடம் கூறினார்.
மேலும் தனது கணவர் தன்னை தாக்கியதால் தான் வீட்டை விட்டு சென்றதாகவும், தனக்கும் அபிக்கும் உள்ளது வெறும் நட்புதான் என்றும் அதனை கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் விளக்கம் அளித்துள்ளார். அவர் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.