தோல்வி பயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட 10ஆம் வகுப்பு மாணவி

இன்று காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரவுள்ள நிலையில் தோல்வி பயத்தில் ஒரு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

மதுராந்தகம் அருகே தண்டரை புதுச்சேரி கிராமத்தில் சந்தியா என்ற மாணவி பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இன்று தேர்வு முடிவுகள் வெளிவரவுள்ள நிலையில் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தால் சந்தியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது

Leave a Reply