தொப்பி சின்னம் தினகரனுக்கு ஏன் கிடைக்காது?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன் தனக்கு தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இதுகுறித்த பதிலளித்த தேர்தல் ஆணையம் வேறு சுயேட்சை வேட்பாளர் தொப்பி சின்னத்தை கேட்கவில்லை என்றால் தினகரனுக்கு அந்த சின்னத்தை கொடுக்க எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அவ்வாறு வேறு வேட்பாளர்கள் கேட்டால் அவருக்கு தொப்பி கிடைப்பது சந்தேகமே என்றும் பதிலளித்துள்ளது.
ஆனால் 3 சுயேட்சைகள் ஏற்கனவே தொப்பி சின்னத்தை கோரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், அவர்கள் மூவரும் அதிமுகவின் ஆட்கள் என்றும் கூறப்படுகிறது. எனவே தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொப்பி தனக்கு கிடைக்கவில்லை என்றால் விசில் அல்லது கிரிக்கெட் பேட் சின்னத்தை தினகரன் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.