தொடர் மழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக கனமழை மற்றும் மிதமான மழை ஆங்காங்கே பெய்து கொண்டிருக்கின்றது.

குறிப்பாக இன்று காலை முதல் சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளான தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, எழும்பூர், கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகின்றது

தொடர்மழை காரணமாக சென்னையின் பல சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
என அம்மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார்.

மேலும் ஒருசில மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து விடுமுறை அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply