தொடர் கனமழை எதிரொலி: சென்னை பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
சென்னை உள்பட தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை காரணமாக போக்குவரத்து பெரும்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கனமழை காரணமாக நாளையும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.