தொடரும் கனமழை : சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வந்த நிலையில் கடந்த வாரம் மூன்று நாட்கள் சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் மழை இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்று முதல் மீண்டும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தர்.
அவர் கூறியபடியே நேற்று இரவு முதல் சென்னையில் விடியவிடிய மழை கொட்டியது. இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
ஆனால் வழக்கம்போல் கல்லூரிகள் நடைபெறும் என தெரிகிறது. அதேபோல் சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.