தேவைப்பட்டால் ராஜினாமாவை திரும்ப பெறுவேன். ஓபிஎஸ்
சென்னை மெரீனாவில் நேற்று இரவு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் செய்த முதல்வர் பன்னீர்செல்வம், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தன்னை கட்டாயப்படுத்தி பதவி விலகச் செய்ததாக குறிப்பிட்டார். இதன் காரணமாக நேற்று முழுவதும் தமிழக அரசியல் பரபரப்பாக காணப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தனது இல்லத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் அவர் கூறியபோது, ‘நான் ராஜினாமாவை திரும்ப பெறும் நிலை ஏற்பட்டால் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு கண்டிப்பாக அதனை நான் செய்வேன் என்றும், சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசித்த பின்னர் ஆளுநர் இதுகுறித்து நல்ல முடிவு எடுப்பார் என்று கருதுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.