தேர்தல் 2019: மோடி போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் ராஜ்நாத்சிங்

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் சோனியா காந்தி, ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதிகளும் உள்ளன.

இந்த நிலையில் 2019 மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிடவுள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சற்றுமுன் அறிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலிலும் மோடி இதே தொகுதியில்தான் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் லக்னோவில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். மற்ற தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply