shadow

தேர்தல் மிண்டும் ரத்தாகலாம்: எச்.ராஜா

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் ரத்தாகலாம் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை வெளிவந்த அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் பாஜக வேட்பாளர் டெபாசிட் வாங்க மாட்டார் என்றுதான் வந்துள்ளது. அதுமட்டுமின்றி சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றியோ அல்லது இரண்டாவது இடத்தையோ பெறுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தினகரன், அதிமுகவை விட அதிக வாக்குகள் வாங்கினால் ஆட்சிக்கு ஆபத்து என்ற நிலை உருவாக வாய்ப்புள்ளதால் தேர்தலை நிறுத்த சதி நடந்து வருவதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனவே பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தலை நிறுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply