தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி தேசிய தலைவர்களும் தமிழகத்தில் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்

அந்த வகையில் இன்று தமிழகத்திற்கு பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார்/ தமிழகம் மற்றும் புதுவை ஆகிய இடங்களில் அவர் பிரசாரம் செய்ய உள்ள நிலையில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார் என்பதும் குறிப்பாக தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்

 

Leave a Reply