தேர்தல் திருவிழா! ஆட்சியை பிடித்து மகுடம் சூட்டப்போவது யார்?

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படவுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நாடு முழுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் மொத்தம் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் 38 மக்களவை தொகுதிகளுக்கும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன. முதலில் தபால் வாக்குகளும், அதன்பின் 8.30 மணி முதல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகிறது

தமிழகத்தில் வாக்குகளை எண்ண 11659 ஊழியர்கள் நியமிக்கபட்டுள்ளனர். இன்னும் சிலமணி நேரங்களில் முன்னிலை நிலவரத்தை வைத்து ஆட்சியை பிடித்து மகுடம் சூட்டப்போவது யார்? என்பது தெரிந்துவிடும்

Leave a Reply