தேர்தல் ஆணையத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான புகார்களை 011-23052123 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு முறை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் கட்டுப்பாட்டு அறை ஒன்று திறக்கப்பட்டு அதில் புகார் பெறும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் நாளை மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கவிருப்பதை அடுத்து இன்று தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.