shadow

தேர்தல் ஆணையத்திடம் மேற்குவங்க அரசு மீது புகார்? அரசு கலைக்கப்படுமா?

சிபிஐ அதிகாரிகளை ஏவி மேற்குவங்க அரசுக்கு இடைஞ்சல் கொடுப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி, கூறி வந்த நிலையில் அதிரடியாக இன்று ஐந்து சிபிஐ அதிகாரிகளை மேற்குவங்க காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் மத்திய அரசின் போக்கிற்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நேற்றிரவு முதல் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் மேற்கு வங்க அரசு மீது இன்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் பாஜக தலைவர்கள் புகார் அளிக்கவுள்ளானர். நிர்மலா சீதாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி, பூபேந்திர யாதவ் ஆகியோர் அடங்கிய பாஜக குழு இன்று தேர்தல் ஆணைய்த்திடம் புகார் அளிக்கவிருப்பதாக செய்திகள் வந்துள்ளது

Leave a Reply