தேர்தல் அதிகாரிகளிடம் திமுக அளித்த திடுக்கிடும் புகார்!

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவதாகவும் எந்தவித அசம்பாவித செயல்களும் நிகழ்வில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிகளவில் வெளியூர்வாசிகள் தங்கியுள்ளதாகவும், அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று, அதிமுகவிற்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களை வலியுறுத்துவதாகவும் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் திமுக வழக்கறிஞர் பிரிவினர் இந்த புகார் மனுவை அளித்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply