தேர்தலுக்கு முந்தைய நாள் வரை ஆலோசனை செய்வாரா விஜயகாந்த்?
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் விறுவிறுப்பாக கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீடுகளும் நடந்து வரும் நிலையில் விஜயகாந்தின் தேமுதிக மட்டும் கடந்த சில வாரங்களாக ஆலோசனை செய்து கொண்டே இருக்கின்றது.
கொள்கை அளவிலான ஆலோசனை என்றால் ஓரிரு நாட்களில் எந்த கூட்டணி என்பது முடிவாகிவிடும். ஆனால் தேமுதிகவின் ஆலோசனை தொகுதிகளின் எண்ணிக்கை அளவில் இருப்பதால் தொடர்ந்து ஆலோசனை செய்து கொண்டே உள்ளனர்.
இன்றும் சென்னையில் தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை செய்து வருவதாகவும், மக்களவை தேர்தல் கூட்டணி பற்றி நிர்வாகிகளுடன் கருத்து கேட்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது. விட்டால் தேர்தலுக்கு முந்தைய நாள் வரை விஜயகாந்த் ஆலோசனை செய்வார் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.