தேர்தலில் போட்டியிடவில்லை என ரஜினியின் நண்பர் அர்ஜுனா மூர்த்தி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அர்ஜுனா மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தது. அவர் ரோபோ சின்னத்தையும் அறிமுகப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய நேரம் இல்லை என்றும் அதனால் சட்டசபை தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக அர்ஜுனா மூர்த்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்

ரஜினியின் தொடங்கப்படாத கட்சியில் இணைந்த அர்ஜுனா மூர்த்தி ரஜினி அரசியல் விட்டு விலகியதால் தனிக்கட்சி ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply