shadow

தெலுங்கானாவில் காங்கிரசுக்கு அடுத்த அடி

சமீபத்தில் நடந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சியான தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டணி வைத்தும் காங்கிரஸ் கட்சியால் அந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. சந்திரசேகர ராவின் கட்சி தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.

இந்த நிலையில் இதுவரை காங்கிரஸ் கட்சியில் இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாரூதின் காங்கிரசில் இருந்து விலகி டிஆர்எஸ் கட்சியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அசாரூதின் டி.ஆர்.எஸ் கட்சியில் சேரவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி தெலுங்கானாவில் காங்கிரசுக்கு அடுத்த அடி என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Leave a Reply