shadow

தெலுங்கானாவின் கரீம்நகர் பெயர் மாற்றப்படும்: உபி முதல்வர்

தெலுங்கானாவில் உள்ள கரீம்நகர் என்ற நகரின் பெயர் கரிபுரம் என மாற்றப்படும் என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். சமீபத்தில் உபி மாநிலத்தில் உள்ள அலகாபாத் பெயரை இவர் மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தெலுங்கானா மாநிலத்தில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நேற்றைய பிரச்சாரத்தின் இறுதி நாளில் உபி முதல்வர் யோகி தெலுங்கானாவில் உள்ள கரீம் நகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மாநிலத்தில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் கரீம் நகரின் பெயர் கரிபுரம் என மாற்றப்படும், உங்கள் உணர்வுகள் மதிக்கப்படும். ஐதராபாத்தின் பெயரை பாக்ய நகர் என மாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி செய்வதற்கு தேர்ந்தெடுங்கள்

தெலுங்கானா மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் டி.ராஜாசிங் லோத், பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தால் அந்த மாநிலத்தில் உள்ள பல நகரங்களின் பெயர்கள், தலைவர்களின் பெயர்களைக் கொண்டு மாற்றப்படும் என கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply