தென் மாநிலங்களில் தமிழ்நாடு தான் இந்தி கற்பதில் நம்பர் ஒன்

5தென்மாநிலங்களில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் இந்தி படிப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள் அதிகம் என்று தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, தட்சின பாரத் இந்தி பிரசார சபாவின் தலைவர் ஜெயராஜ் கூறும்போது, கடந்த 2018ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 5 லட்சத்து 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்தி மொழி தேர்வு எழுதினர். இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றார்.

அதேசமயம், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 2 லட்சத்து 4 ஆயிரம் பேரும், கர்நாடகாவில் 60 ஆயிரம் பேரும், கேரளாவில் 21 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு ஹிந்தி தேர்வு எழுதினார்கள். ஆக ஹிந்து தேர்வு எழுதுபவர்கள் என்றால், அதில் தமிழகம்தான் முதலிடம் என்றார்.

Leave a Reply