தென்னிந்தியாவிற்கான மலேசிய தூதருடன் முக ஸ்டாலின் சந்திப்பு

தென்னிந்தியாவிற்கான மலேசிய நாட்டு தூதர் சரவணன் அவர்கள் இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பு முக ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நடைபெற்றது. இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பி என்று மலேசிய தூதர் சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு ஸ்டாலினுக்கு சரவணன் வாழ்த்து தெரிவித்ததாகவும் தென்னிந்தியாவிற்கான மலேசிய தூதர் சரவணன் கூறினார்.

Leave a Reply