தென்னாப்பிரிக்காவுக்கு ஓசியாக கிடைத்த ஒரு புள்ளி

இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று தென்னாப்பிரிக்கா. ஆனால் இந்த அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து இன்னும் புள்ளிப்பட்டியலில் தனது கணக்கை தொடங்காமல் இருந்தது

இந்த நிலையில் நேற்று மேற்கிந்திய தீவுகள் அணியுடன் தென்னாப்பிரிக்கா அணி மோதவிருந்த லீக் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்துள்ளது.

இந்த தொடரில் மழையினால் மட்டுமே தென்னாப்பிரிக்கா இதுவரை ஒரு புள்ளியை பெற்றுள்ளது. இன்னும் விளையாடி வெற்றி பெற்று அந்த அணி ஒரு புள்ளியை கூட பெறவில்லை. இனிவரும் போட்டிகளிலாவது வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Leave a Reply