தூத்துகுடியில் போட்டியிட தயார்! தமிழிசை செளந்திரராஜன்

தூத்துகுடியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் அவரை எதிர்த்து அதே தூத்துகுடியில் போட்டியிட தயார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்றும், கட்சி தலைமை அனுமதித்தால் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தயார் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

தூத்துகுடி தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமிழிசையும், சரத்குமார் மனைவி நடிகை ராதிகாவும் போட்டியிட்டால் கனிமொழி தனது வெற்றிக்காக கடுமையாக உழைக்க நேரிடும் என்றும் அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்,.

Leave a Reply