துரை வைகோ ஆக மாறும் துரை வையாபுரி: மதிமுகவிலும் வாரிசு அரசியல்?
வாரிசு அரசியலை எதிர்த்து திமுகவில் இருந்து வெளியேறிய வைகோ, தற்போது மதிமுகவில் தனது மகன் துரை வையாபுரிக்கு பதவி வழங்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது
ம.தி.மு.க-வைவிட்டு நாஞ்சில் சம்பத் விலகிய சமயத்தில், ‘வைகோ, தன் மகனை கட்சிக்குள் கொண்டுவர முயற்சி செய்கிறார். அதற்கு நான் தடையாக நிற்பேன் என்பதற்காக என்னைப் புறக்கணிக்கிறார்’ என்று வைகோவைச் சாடினார். அந்தக் குற்றச்சாட்டு உண்மை என்பதுபோல இப்போது பல சம்பவங்கள் நடப்பதாக மதிமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மதிமுக கட்சிக் கூட்டங்கள், விழாக்கள் அனைத்திலும் துரை வையாபுரி முன்னிலைப்படுத்தப்படுவதாகவும், `துரை வையாபுரி’ என்ற பெயர் தற்போது `துரை வைகோ’ என மாற்றம் பெற்றுள்ளதாகவும், துரை வைகோ என்ற பெயரில் புதிய வாட்ஸ்அப் குழு அமைக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுவதை பார்த்தால் விரைவில் துரை வைகோ அரசியல் களத்தில் குதிப்பார் என்று கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.