shadow

துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறாரா ஓபிஎஸ்?

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

மூத்த அமைச்சர்கள், பதவியை துறந்துவிட்டு நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட தயாராக வேண்டும் என்றும், கட்சியின் வளர்ச்சிக்காக துணை முதலமைச்சர் பதவியையும் துறக்கத் தயார் என்றும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் உருக்கமான பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

முன்னதாக அதிமுக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றும் எம்.எல்.ஏ, ஏ.கே.போஸ் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply