துக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி செய்தது உண்மையா? சிசிடிவி வீடியோ
நேற்று அதிகாலை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் மயிலாப்பூர் வீட்டில் மர்ம நபர்கள் சிலர் குண்டு வீச முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் இந்த செய்தி வதந்தியாக இருக்கலாம் என்றும் ரஜினி-பெரியார் விஷயத்தை மறக்கடிக்கவே இப்படி ஒரு புரளி கிளப்பி விடுவதாகவும் ஒரு சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்
இதனை அடுத்து குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்தவர்களின் சிசிடிவி கேமரா காட்சியை தற்போது போலீஸார் வெளியிட்டுள்ளனர் இதில் மூன்று இருசக்கர வாகனங்களில் வரும் 6 பேர் குண்டு வீச முயற்சிப்பது தெளிவாக இருப்பதை அடுத்து குருமூர்த்தி வீட்டில் குண்டு வீசிய மர்ம நபர்கள் முயற்சித்தது உண்மைதான் என்பது தெரியவந்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.