தீபாவை அடுத்து விசாரணை கமிஷன் முன் தீபக் ஆஜர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை ஆணையம், இதுவரை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை விசாரணை செய்த நிலையில் நேற்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிடம் விசாரணை செய்தது.
இந்த நிலையில் இன்று தீபாவின் சகோதரி தீபக்கிடம் விசாரணை ஆணையம் விசாரித்துவருகிறது. அவரிடம் ஆணைய அதிகாரிகள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்த விசாரணை கலசமகாலில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணை முடிந்தவுடன் அவரிடம் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் கலசமகால் முன் குவிந்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.